பூந்தமல்லி. பூந்தமல்லியை அடுத்த மோரை கிராமம் அருணாச்சலம் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (25). இவரது நண்பர் பிரவீன் ராஜ் (21), இருவரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர். நேற்று பிற்பகல் வேலை விஷயமாக இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்ராஜ் ஓட்டினார். அசோக்குமார் பின்னால் அமர்ந்து கொண்டு சென்றார். அப்போது, சென்னீர்குப்பம்-ஆவடி சாலை, காடுவெட்டி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், அசோக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.