தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகம் கிளைவ் பேக்டரி ராஜாஜி சாலையில் பாழடைந்த பொதுகழிப்பறையை இடித்துவிட்டு, புதிய கழிப்பறை கட்டும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு ஊழியர்கள் பள்ளம் தோண்டியபோது, அங்கு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது. தகவலறிந்து அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வழிபட்டனர்.