சிவலிங்கம் கண்டெடுப்பு

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகம் கிளைவ் பேக்டரி ராஜாஜி சாலையில் பாழடைந்த பொதுகழிப்பறையை இடித்துவிட்டு, புதிய கழிப்பறை கட்டும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு ஊழியர்கள் பள்ளம் தோண்டியபோது, அங்கு சிவலிங்கம் இருப்பது தெரிந்தது.  தகவலறிந்து அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

இதையடுத்து, வடக்கு கடற்கரை போலீசார், அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு, 3 அடி உயரமுள்ள சிவலிங்கத்தை மீட்டனர். இது பழமையான சிலையா, இங்கு எப்படி வந்தது, இந்த இடத்தில் ஏற்கனவே கோயில் இருந்ததா என ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories: