சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 5000 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சியால் சேகரிக்கப்படுகிறது. இதில் 60 சதவீத மக்கள் மட்டுமே குப்பைகளை தரம் பிரித்து வழங்குகின்றனர்.
இதில் 1, 2, 3, 7, 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய 11 மண்டலங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் பணியை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேனாம்பேட்ைட, கோடம்பாக்கம், அடையாறு, வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் ஸ்பெயினை சேர்ந்த தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.