காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து வாலாஜாபாத் வழியாக வந்தவாசி, செய்யாறு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் காஞ்சிபுரம் நகருக்குள் வராமல் செல்ல ஓரிக்கை புறவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் பெரியார் நகரில் இருந்து மிலிட்டரி சாலை வழியாக செவிலிமேடு செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதுபோல் சின்ன ஐய்யங்குளம், அண்ணா குடியிருப்பு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியினர் அத்தியாவசிய தேவைக்காகவும், பணி காரணமாகவும் காஞ்சிபுரம் செல்வதற்கு ஓரிக்கை புறவழிச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.