நெல்லை: டவுன்- பேட்டை சாலையில் முறிந்த மரக்கிளையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்க தலைவர் முகம்மது அயூப் கலெக்டரிடம் அளித்த மனு விவரம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டை டவுன் சாலையில் குளத்தங்கரை தர்கா சமீபமாக பெரிய ராட்ச மரம் முறிந்து விழுந்தது. ஒரு ஆட்டோ அதில் சிக்கி கொண்டதோடு, போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. ஆட்டோவில் சென்றவர்கள் பலத்த காயங்களோடு உயிர் தப்பினர்.