குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 810 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 9 பேர், இறந்துள்ளனர். இந்நிலையில், குன்றத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்தபோது, நேற்று அவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் சென்னை, அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் ஸ்டேட் வங்கி உள்ளது அங்கு பணியாற்றும் காசாளர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.