காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ16 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை, எம்பி செல்வம் தலைமையில், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ9.5 லட்சத்தில் புதிதாக நவீன அங்கன்வாடி மையம், பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவில் ரூ6.13 லட்சத்தில் உயர் மின்விளக்கு கோபுரம் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.