மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் மருவத்தூரில் கும்ப மரியாதை செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, நேற்று காலை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த அவர், மேல்மருவத்தூர் வந்தார்.