வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

பொன்னேரி: பொன்னேரி தாலுகாவில் அடங்கிய மீஞ்சூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், வழக்கறிஞர்கள் சங்கத்தலைவராக செல்வம், துணைத் தலைவராக நித்தியகுமார், செயலாளராக மாரி, பொருளாளராக சுரேஷ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், இணைச் செயலாளர்களாக டில்லிபாபு, துரைவேல், பாண்டியன், முகமதலி, நிலவழகன், கார்த்திக், சிற்றரசு, அமுதவல்லி, சுதாகர், துணை செயலாளர்களாக கண்ணன் ரமேஷ், கங்காதரன், உதயகுமார், அங்கமுத்து வேலு, சாம்ராஜ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: