பொன்னேரி: மீஞ்சூர் வேளாண்மை உதவி இயக்குனர் டில்லிகுமார் வெளியிட்ட அறிக்கை: மீஞ்சூர் வட்டார பகுதிகளில் தற்போது சம்பா பயிரிடுவதற்கு விவசாயிகள் நாற்று விடும் பணிகள் துவங்க உள்ளது. விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை போக்கவும், சாகுபடி செலவு குறைவினால் அதிக மகசூல் பெறவும் இயந்திர நடவு முறையை பயன்படுத்தினால் விவசாயிகள் பெரும் லாபத்தை ஈட்டலாம்.