ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் போலீசார், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஊத்துக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட தாராட்சி, பாலவாக்கம், லச்சிவாக்கம், பேரண்டூர், செஞ்சியகரம், பனப்பாக்கம் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் 48 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சிசிடிவி கேமரா அமைப்பது குறித்து காவல் துறை மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமை தாங்கினார். கூட்டத்தில், ‘ஒரு ஊராட்சியில் 2 அல்லது 3 கிராமங்கள் உள்ளன.