வேளச்சேரி: பள்ளிக்கரணை அருகே ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன்களை ஆன்லைனில் பார்த்து வந்தார். அப்போது, இவரது பேஸ்புக் பக்கத்தில் ₹12,999 விலை கொண்ட செல்போனை ரூ2,999க்கு விற்பதாக ஒரு விளம்பரம் வந்தது. இதனை நம்பி அந்த செல்போனை கடந்த 2ம் தேதி ஆர்டர் செய்தார். இந்நிலையில், நேற்று இவர் முகவரிக்கு டெலிவரி செய்ய ஒரு நபர் வந்து தங்களுக்கு செல்போன் பார்சல் ஒன்று வந்துள்ளது. அதற்கான தொகையை கொடுத்தால் பார்சலை கொடுப்பதாக கூறினார். முகமது அலி அதற்கான உரிய பணத்தை கொடுத்து அவர் முன்பே பார்சலை பிரித்துப் பார்த்தார்.