புவனேஷ்வர்: ஒடிசாவில் போலீசார் நடத்திய தாக்குதலில் 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒடிசா மாநிலம், களாஹந்தி மாவட்டத்தில் உள்ள பந்தராங்கி சிர்கி காட்டுப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறை சிறப்பு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.