ஒடிசாவில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

புவனேஷ்வர்: ஒடிசாவில் போலீசார் நடத்திய தாக்குதலில் 4 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒடிசா மாநிலம், களாஹந்தி மாவட்டத்தில் உள்ள பந்தராங்கி சிர்கி காட்டுப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறை சிறப்பு குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள், போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே அரை மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில், 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் வீரர் ஒருவர் காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: