தொழிலில் சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில் தகராறு: சென்னை விமான நிலையத்தில் பாலியல் கும்பல் கைது.!!!

சென்னை:  சென்னையில் பாலியல் தொழிலில் சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறு கொலை முயற்சியில் முடிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தியும், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தும் கொலை செய்ய முயற்சி செய்த ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அசோக் நகரில் உள்ள ராகவன் காலனியில் இளைஞர் ஒருவர் தீ காயங்களுடன் மயக்க நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞருக்கு சிகிச்சை அளித்து முதலுதவி செய்தனர். அவரது பெயர் தீபக் என்பதும், அடுக்குமாடி குடியிருப்பில் 2வது தளத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், சமைக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார், தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது உடலில் தீ காயங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது அறையை போலீசார் சோதனை செய்தபோது, ரத்த கரையுடன் கூடிய கத்தி, மற்றும் மண்ணெண்ணெய் கேன் ஆகியவை கிடந்ததை பார்த்துள்ளனர். பின்னர், தீபக்கின் செல்போனில் இருந்த கடைசி எண்களை ஆய்வு செய்தபோது, 2 எண்களும் மீனப்பாக்கம் விமான நிலையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மீனப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களை உசார் படுத்தினர்.

 இதனையடுத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளியே சென்ற இருவரின் அடையாளங்களை விமான நிலைய போலீசாருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் இருவரையும் கைது செய்து குமரன்நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் டெல்லியை சேர்ந்த ஹேமன் மற்றும் நிலா அக்தர் என்பது தெரியவந்தது. அதாவது தீபக் உட்பட 3வரும் வடமாநிலங்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இதில் கிடைத்த பணத்தை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறில் தீபக்கை கத்தியால் குத்தி, மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்த இருவரும் முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: