கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே வயலில் மின்சாரம் தாக்கி நேற்று யானை பலியானது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டை அடுத்த வேனோலியில் நேற்று வயலில் யானை புகுந்து துவம்சம் செய்ததால் வரப்பிலிருந்த மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்தது. இதில் மின்கம்பிகள் பட்டதில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பலியானது.