சென்னை: சிறுவாபுரி முருகன் கோயிலில், 5 மாதங்களுக்கு பிறகு கிருத்திகையையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் சிறுவாபுரி முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து பல்வேறு நேர்த்தி கடனை செலுத்துவார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில்கள் அனைத்தும் கடந்த 1ம் தேதி முதல் திறக்கப்பட்டது. இதனால், வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் கோயில்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.