சென்னை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று காணொலி காட்சி மூலமாக நிருபர்களிடம் கூறியதாவது: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தமிழகத்தில் 265 ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்களில் 7.35 லட்சம் பேர் பயணித்துள்ளனர். மேச்சேரி சாலை-மேட்டூர் இடையே 12 கி.மீ இரட்டை வழி பாதைகள் மற்றும் தாம்பரம்-செங்கல்பட்டு 3 வழி பாதைகள் பணி முடிவடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 270 வழிதடங்களை மின்மயமாக்கல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில்களை இயக்குவதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.