சென்னை: டிஜிட்டலில் திரைப்படம் வெளியிட கியூப்., யூ.எப்.ஓ., நிறுவனங்கள் வாரக் கட்டணம் வசூலிப்பதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். கடிதத்தில், சங்கத்தை சேராத தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அதில், புரொஜெக்டர் முதலீட்டுக்கும் அதிகமாக கியூப்., யூ.எப்.ஓ., நிறுவனங்கள் வாரக் கட்டணம் வசூலித்திருப்பதால், இனி தயாரிப்பாளர்கள் வாரக் கட்டணம் செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் நிறுவனங்கள் வாரக் கட்டணம் வசூலிக்க கடும் எதிர்ப்பு: திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா கடிதம்!!!
- நிறுவனங்கள்
- பாரதி ராஜா
- தயாரிப்பாளர்கள் சங்கம்
- தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்
- தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்
- ஜனாதிபதி