கும்மிடிப்பூண்டி: தேர்வழி ஊராட்சியில் தேர்வழி கிராமம், கம்மாரபாளையம், ராகவரெட்டிமேடு, தம்புரெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டம்பேடு செல்லும் சாலை ஓரமாக அரசு மதுபான கடை சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அப்போது இருந்தே இந்த டாஸ்மாக் கடைய மூட வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த டாஸ்மாக்கில் மதுபானங்களை வாங்கி தைலத்தோப்பு, வயல்வெளி, உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்துகின்றனர்.