செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு, நேற்று வழக்கம்போல் வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் அறையில் உள்ள ஜன்னலில் சுமார் 4 அடியில் கொம்பேரி மூக்கன் பாம்பு, பின்னிக் கொண்டு இருந்ததுதை கண்ட தாசில்தார் அலறி கொண்டு வெளியே ஓடினார். அவரை தொடர்ந்து ஊழியர்களும் ஓடினர்.