வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு, நேற்று வழக்கம்போல் வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் அறையில் உள்ள ஜன்னலில் சுமார் 4 அடியில் கொம்பேரி மூக்கன் பாம்பு, பின்னிக் கொண்டு இருந்ததுதை கண்ட தாசில்தார் அலறி கொண்டு வெளியே ஓடினார். அவரை தொடர்ந்து ஊழியர்களும் ஓடினர்.

தகவலறிந்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் அங்கு சென்று, பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால், பாம்பு, ஏசி பெட்டியில் சென்று மறைந்துவிட்டது. இதனால், வீரர்கள் பாம்பை பிடிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: