திருப்பணிகள் விரைந்து முடிய வேண்டி மகா காளீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த மோத்தக்கல் மகா காளீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்  நடந்தது.கண்ணமங்கலம் அடுத்த மோத்தக்கல் கிராமத்தில் பழமையான மகா காளீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் முற்றிலும்  சேதமடைந்து இருப்பதால், புதியதாக கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்  நடத்தினால் கும்பாபிஷேகம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, மகா காளீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் விரைவில் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க வேண்டி நேற்று, கோயில்  வளாகத்தில் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதுதல் நடத்தினர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும்  அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: