சென்னை: கொரோனா தொற்றால் 70 சதவீதத்துக்கும் கூடுதலாக நுரையீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு உயர் சிகிச்சை மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 58 வயது நபருக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சோதனை செய்ததில் 70 சதவீதம் அளவுக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. உயர் சிகிச்சை அளித்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக அவரது மகன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்திக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 70 சதவீதம் அளவுக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.