உத்திரமேரூர்: பைக் மீது தனியார் பஸ் மோதியதில், பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் உத்திரமேருர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த வாடாதவூர் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். கூலித் தொழிலாளி. இவரது மகன் தனுஷ் (18). அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் ஸ்ரீவர்ஷன் (14). சிறுவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே பிளஸ் 2, 8ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று இரவு தனுஷ், ஸ்ரீவர்ஷனை பைக்கில் அழைத்து கொண்டு சாலவாக்கம் நோக்கி புறப்பட்டான். பாண்டவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலை வளைவில் எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ், பைக் மீது மோதியது.