இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபுபக்கர் தாயார் காலமானார்

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கரின் தாயார் மெஹருனிஷா (82). அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவரது இறுதிச் சடங்கு நாளை சிகாகோவில் உள்ள மசூதியில் நடைபெறுகிறது. இலினாய்ஸ் மாகாண ஆளுநர் ப்ரிட்ஸ்கர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் சிகாகோவில் குடியேறிய மெஹருனிஷா அங்குள்ள தமிழர்களின் முன்னேற்றத்திற்கு ஏராளமான சமூகப் பணிகளையும் உதவிகளையும் செய்து வந்துள்ளார்.

இலினாய்ஸ் மாகாண ஆளுநர் வெற்றி பெறுவதற்கும் உறுதுணையாக இருந்தவர். விமானப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் இந்த நிகழ்வில் அவரது மகன் அபூபக்கர் கலந்து கொள்ளவில்லை. அங்குள்ள உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் ஏற்பாட்டில் இறுதிச் சடங்குகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.   

Related Stories: