காணொலி காட்சி மூலம் திமுக பொதுக்குழு கூட்டம்: ஆவடி நாசர் அறிக்கை

ஆவடி: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வௌியிட்ட அறிக்கை:  காணொலி காட்சி வாயிலாக கடந்த 3ம் தேதி அன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர் ஸ்டாலின் அந்தந்த மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஓரிடத்தில் அழைத்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க செய்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார். அதன்படி திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களான மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை, செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, செயலாளர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள், கழக அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பட்டாபிராம் தண்டுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் 9ம் தேதி காலை 8.30 மணியளவில் வருகை தந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: