சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவை-சென்னை சென்ட்ரல் (ரயில் எண் 06101) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று (சனி) இரவு 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, எம்.சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 06102) இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயயில் நாளை (ஞாயிறு) இரவு 9 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு கோவை வந்தடையும்.