சென்னை: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் விவகாரத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜன், எம்எல்ஏ நட்ராஜ் ஆகியோருக்கு சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் முதற்கட்டமாக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மாபா.பாண்டியராஜன் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் ஆகியோரிடம் கடந்த 27ம் தேதி காணொலி காட்சி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரணை மேற்கொண்டார். அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன் மனுதாரர் என்ற அடிப்படையில் பங்கேற்று இருந்தார்.