பெரியகுளம்: கொடைக்கானல் மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக எலிவால் அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ளது எலிவால் அருவி. கொடைக்கானல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது, இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். வத்தலக்குண்டு வழியில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் டம்டம் பாறை அருகே எலிவால் அருவி, மஞ்சளாறு அணையின் முழு இயற்கை அழகையும் ரசித்து விட்டு செல்வர்.