சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியீடு: 3 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,38,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,23,851 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,814 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,059 ஆக உள்ளது.

சென்னையில் 61.27% ஆண்களும் 38.73% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(03.09.2020) மட்டும், 11,325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (செப்டம்பர் 04) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    4,059

2     மணலி        1,998

3     மாதவரம்        4,378

4     தண்டையார்பேட்டை   10,821

5     ராயபுரம்        12,496

6     திருவிக நகர்        9,402

7     அம்பத்தூர்        8,554

8     அண்ணா நகர்    14,017

9     தேனாம்பேட்டை    12,166

10     கோடம்பாக்கம்    14,060

11     வளசரவாக்கம்    7,737

12     ஆலந்தூர்        4,371

13     அடையாறு       9,416

14     பெருங்குடி        3,954

15     சோழிங்கநல்லூர்    3,329

16     இதர மாவட்டம்    3,093.

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    316

2     மணலி        157

3     மாதவரம்        508

4     தண்டையார்பேட்டை    717

5     ராயபுரம்        944

6     திருவிக நகர்        915

7     அம்பத்தூர்        965

8     அண்ணா நகர்    1,418

9     தேனாம்பேட்டை    875

10     கோடம்பாக்கம்    1,391

11     வளசரவாக்கம்    887

12     ஆலந்தூர்        726

13     அடையாறு        1,055

14     பெருங்குடி         528

15     சோழிங்கநல்லூர்    507

16     இதர மாவட்டம்   150 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: