சென்னை: மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தமிழக அரசின் கொரோனா தனிமை வார்டு இயங்கி வருகிறது. இங்கு, 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாலை கொரோனா மையத்தின் 4வது மாடியில் இருந்து ஒரு பெண் கீழே விழுந்ததில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்த பெண் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த செல்வி (48), என்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1ம் தேதி இந்த மையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.