புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வயது முதிர்வால் மாற்றுத்திறனாளி மகளை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பனங்குளம் கிழக்கு கிராமம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் செல்லையா (70). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகள் சாந்தி (46). மாற்றுதிறனாளியான இவர் தந்தை பாதுகாப்பில் இருந்து வந்தார். செல்லையாவுக்கு வயதாகி விட்டதால், மகளை கவனிக்க முடியவில்லை. தனக்கு பின் மகளை யார் பார்த்து கொள்வார்கள் என்று கவலைப்பட்ட அவர், மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.