பைக்குகள் மீது அரசு பஸ் மோதல் தாய், மகன் உட்பட 4 பேர் பரிதாப பலி

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே குளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (54). இவர் தனது தாய் பாவாத்தாளுடன் (70) ஒரு பைக்கிலும், பாலசுப்பிரமணியத்தின் அக்காள் பொங்கியம்மாள் (56), கணவர் மோகனாம்புரியுடன் (63) மற்றொரு பைக்கிலும் சோலார் அம்மன் நகரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் புதுவலசு பகுதியில் எதிரே வந்த அரசு பஸ் 2 பைக்குகள் மீதும் மோதியது. இதில் 4 பேரும் தடுப்புச்சுவரின் மீது மோதி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

Related Stories: