இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு தடை: மத்திய அரசின் நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு..!!

சென்னை: இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் ‘பப்ஜி’ எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மாணவர்களின் கல்வி சிந்தனையை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீட்கப்படுவார்கள். பப்ஜி இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதியே நான் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பாமக-வின் கோரிக்கை தாமதமாக, வேறு காரணங்களுக்காக ஏற்கப்பட்டிருந்தாலும், இதனால் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி. பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த விளையாட்டுக்கு அடிமையாகிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: