காரில் சினிமா எடிட்டர் மர்ம சாவு

வேளச்சேரி: நன்மங்கலம் ஏரிக்கரையோரம் நேற்று காலை ஒரு காரில் வாலிபர் பின் சீட்டில் உட்கார்ந்த நிலையில் மயங்கி கிடந்தார். மேலும், அவர் அருகில் மதுபாட்டில்கள் கிடந்தன. இதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், பொதுமக்களுடன் சேர்ந்து கார் கதவை உடைத்து உள்ளே இருந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் இறந்தவர் அஸ்தினாபுரம் வெங்கட்ராமன் நகர் 2வது தெருவை சேர்ந்த அலெக்ஸ் (29) என்பதும், இவர் திரைத்துறையில் எடிட்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.

Related Stories: