சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் 10 மணி நேரத்திற்கும் மேல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திலிருந்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் 3 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு அதிகாரி அலுவலகத்திற்குள் நேற்று பிற்பகல் 12 மணியளவில் நுழைந்து சோதனை செய்தனர்.
அப்போது அமைச்சர் மா. பா. பாண்டியராஜனின் உதவியாளர் திருநாவுக்கரசு என்பவர் நகராட்சி அலுவலகத்தில் இருந்தார். அவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர்.