சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் புகார் அளிக்கும் முறையை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ேநற்று தொடங்கி வைத்தார்.சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்ட பிறகு கடந்த ஓராண்டாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அனைத்து மகளிர் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அதைதொடர்ந்து பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் மூலம் புகார் அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.