செய்யூர்: செய்யூர் அருகே ஆறு பேர் சென்ற இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 4 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (28). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் செய்யூர் அடுத்த ஜல்லிமேடு பகுதியில் குடியேறி தனது குடும்பத்தினருடன் பல்வேறு பகுதிகளில் கிணறு வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை முருகன் இருசக்கர வாகனத்தில் மனைவி கற்பகம் (25), மகள்கள் லட்சுமி (4), செல்வி (5), ஒன்றரை வயது மகன் விஜய் மற்றும் தனது அண்ணன் மனைவி சுகந்தி (30) ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஆக்கிணாம்பேடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.