சென்னை : 50% பயணிகளுடன் பேருந்து இயங்கினாலும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பின்பக்க வாயில் வழியாக ஏறும் போது கிருமி நாசினி வழங்கப்படும்; பின்னர் பயணம் முடியும் போது முன்பக்க வாயில் வழி பயணிகள் இறங்க வேண்டும். பேருந்துகள் ஒவ்வொரு நடை இறுதியில் கிருமி நாசினி கொண்டு பேருந்து முழுவதுமாக சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.