சென்னை: பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தற்போது புறநகர் ரயில் சேவை, பள்ளி கல்லூரிகள், தியேட்டர் உள்ளிட்டவை திறக்க மட்டுமே தடை தொடர்கிறது.