சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 5 மண்டலங்களில் 1,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை, இதுவரை 1,18,235 பேர் குணமடைந்தனர்!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் 1,34,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,18,235 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,729 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,472 ஆக உள்ளது.

சென்னையில் 60.50% ஆண்களும் 39.50% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(31.08.2020) மட்டும், 13,100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    3,992

2     மணலி        1,946

3     மாதவரம்        4,209

4     தண்டையார்பேட்டை   10,511

5     ராயபுரம்        12,191

6     திருவிக நகர்        9,030

7     அம்பத்தூர்        8,134

8     அண்ணா நகர்    13,451

9     தேனாம்பேட்டை    11,763

10     கோடம்பாக்கம்    13,571

11     வளசரவாக்கம்    7,301

12     ஆலந்தூர்        4,080

13     அடையாறு       8,887

14     பெருங்குடி        3,698

15     சோழிங்கநல்லூர்    3,129

16     இதர மாவட்டம்    2,342.

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    299

2     மணலி        156

3     மாதவரம்        554

4     தண்டையார்பேட்டை    825

5     ராயபுரம்        953

6     திருவிக நகர்        1,007

7     அம்பத்தூர்        1,099

8     அண்ணா நகர்    1,572

9     தேனாம்பேட்டை    988

10     கோடம்பாக்கம்    1,487

11     வளசரவாக்கம்    997

12     ஆலந்தூர்        829

13     அடையாறு        1,312

14     பெருங்குடி         580

15     சோழிங்கநல்லூர்    564

16     இதர மாவட்டம்   270 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: