கடலூர்: கடலூரில் கடனுக்கு மளிகை பொருட்களை கேட்டு வீச்சரிவாளுடன் கடைக்காரரை மிரட்டும் சிசிடிவி கட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டம் முதுநகரில் ராஜா என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே தெருவில் வசித்து வரும் இமயன் என்பவர் கடனுக்கு மளிகை பொருட்களை கேட்டு ராஜாவிடம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஆனால் கடைக்காரர் கடனுக்கு பொருட்களை தர மறுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீச்சரிவாளுடன் மீண்டும் கடைக்கு வந்த இமயன் கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி ராஜாவை தாக்க முயற்சித்துள்ளார்.