சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, சென்னையில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 13, 653 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 808 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 2 ஆயிரத்து 712 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 1,621 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,577 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 1,327 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.