பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக, திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ்(22), கட்டிட தொழிலாளி. இவரது தாய் மாமா மகள் சுப்புலட்சுமி(19). இவர்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், யுவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்ததால் திருமணம் ஆனதில் இருந்தே கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர்களை, பெற்றோர் சமரசம் செய்து வைத்து வந்தார்களாம். நேற்று முன்தினம் யுவராஜ் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாராம். இதனை சுப்புலட்சுமி தட்டிக்கேட்டதில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.