சென்னை: இன்று முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றைத் தடுக்க அரசு நிர்வாகமும், கடை உரிமையாளர்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்றே மளிகை கடைகள், காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கிவிடுகிறது.