சென்னை: நிதி நிலையில் தமிழக அரசு தள்ளாடும் போது பால்வளத்துறைக்கு இரண்டாவது தலைமை அலுவலகம் தேவையா என்று பால் முகவர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பால்வளத்துறைக்கு இரண்டாவது ஆணையர் அலுவலகத்தை மதுரையில் அமைக்க திட்டமிட்டு, பால்வளத்துறை சார்பில் கடந்த மார்ச் 5ம் தேதி நிதித்துறை சார்பில் முன்மொழிவு அனுப்பப்பட்டு ஆறு மாதத்திலேயே அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது. அரசின் நிர்வாகச் செலவுகளை குறைக்க வேண்டுமென்று, அரசு ஊழியர் ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்புவிப்பு இவற்றில் கைவைக்கும் தமிழக அரசு இவ்விஷயத்தில் அவசரம் காட்டியுள்ளது ஏனோ?