துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக நாடு திரும்பியதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.கொரோனா பீதி காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. அதற்காக ஐபிஎல் அணிகள் கடந்த வாரம் முதல் ஒவ்வொன்றாக யுஏஇ சென்றடைந்தன. சிஎஸ்கே அணி ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றடைந்தது. அங்கு ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் நேற்று முடிந்த நிலையில், அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஒருவருக்கும், 12 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேரும் அவர்கள் தங்கியிருந்த துபாய் சொகுசு விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.