சென்னை: கொரோனா தொற்று உறுதியான பயத்தில் 49 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க நபர், காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் அருகில் உள்ள சுகாதார மையத்தில் பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதியானது. மருத்துவமனைக்கு தயாராக இருக்கும்படி சுகாதாரத்துறை ஆய்வாளர் ரமேஷ் செல்போனில் அழைத்து தெரிவித்துள்ளார்.