கடலூர்: பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சொத்து வழக்கை காரணம் காட்டி 50 லட்சம் ரூபாய் கடன் தருமாறு கட்டிட தொழிலாளர் ஒருவர் நீதிபதிக்கே கடிதம் எழுதியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாத்தாவின் வீட்டை மோசடி செய்த வரதராஜு என்பவரிடம் இருந்து மீட்டுத்தரகோரி 1994ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பண்ருட்டி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, 2012ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை ஆறுமுகம் நாடியுள்ளார். 26 ஆண்டுகளாகியும், வழக்கு முடிந்தபாடில்லை. சொத்துக்கு தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த ஆறுமுகம், மனு மீது நடவடிக்கைக்கோரி குடியரசு தலைவருக்கும் கடிதம் எழுதிவிட்டார்.