தாம்பரம்: கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற அரசு மருத்துவமனைகள் தவிர சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்து வருவதால் அரசு அதிகாரிகள் அவ்வப்போது தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.