விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் சண்முகராஜ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்த பின்பு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். விழுப்புரம் பகுதியில் ரயில்களை அதிவேகமாக இயக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என கூறினார். தற்போது மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். தேஜஸ் போன்ற இடைநில்லா அதிவேக ரயில்கள் ஒரு சில ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்கிறது என கூறினார். எனவே விழுப்புரத்தில் நிற்பதில்லை எனவும், விழுப்புரம் வழியாக செல்லும்போது சற்று சீரான வேகத்தில் குறைத்து இயக்கப்படக்கூடிய சூழல் உள்ளது என பேட்டியளித்தார்.